ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் - விஹாரியின் அர்ப்பணிப்புக்கு குவியும் பாராட்டு

x

ரஞ்சி கோ ப்பை காலிறுதி போட்டியில் காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒற்றைக் கையில் பேட்டிங் செய்த ஆந்திர அணியின் கேப்டன் விஹாரி, அணிதான் எப்போதும் முக்கியம் எனக் கூறி உள்ளார்.

மத்தியப் பிரதேசத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் காலிறுதி ஆட்டத்தில் விஹாரி, மணிக்கட்டுப் பகுதியில் காயம் அடைந்தார்.

எனினும், அணியின் சூழலைக் கருத்தில்கொண்டு வலதுகை ஆட்டக்காரரான விஹாரி, முதல் இன்னிங்சில் பேட்டிங் இடதுகையில் பேட்டிங் செய்தார்.

தொடர்ந்து ஒற்றைக் கையை வைத்தும் அவர் பேட்டிங் ஆடினார்.

விஹாரியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள விஹாரி, அணிதான் முக்கியம் என்றும், எப்போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்