ரஞ்சி கோப்பை கிரிக்கெட் - பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம் | ranchi | sports | delhi | thanthi tv

டெல்லியில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி, மோசமான ஆடுகளம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில், பஞ்சாப் மற்றும் ரயில்வே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கி வெறும் 103 ஓவர்களிலேயே, ஆடுகளத்தில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. ஆடுகளத்தில் இயல்பை விட பந்துகள் அதிகமாக எகிறி வந்ததால், கள நடுவர்கள் 2-ஆம் நாள் ஆட்டத்தை பாதியில் நிறுத்தினர். தற்போதைய ஆடுகளம் ஆபத்தானது மற்றும் ஆடுவதற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ஆடுகளத்தில் 3-ஆம் நாள் ஆட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com