சரசர சரசரவென உயர்ந்த பத்திரப்பதிவு சேவைக் கட்டணம்-தமிழக அரசு அதிரடி
பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை ஜூலை 10 - ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது. இதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story