ராமேஸ்வரம் கடலில் சூறைக்காற்று அபாயம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

x

ராமேஸ்வரம் கடலில் சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து பேசிய மீனவர்கள், இயற்கை சீற்றம் மற்றும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போது போராட்டம் போன்ற காரணங்களால் வருவாய் இன்றி தவித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் அரசு புயல் கால நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்