கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் அடித்துக் கொலை - ராமநாதபுரத்தில் பரபரப்பு

x
  • ராமநாதபுரத்தில் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தேவராஜ். இவர் சென்னையில் கார் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், கொலை வழக்கு ஒன்று தொடர்பாக ராமநாதபுர நீதிமன்றத்தில் ஆஜராக பரமக்குடி வந்துள்ளார்.
  • அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு தேவராஜ் சென்றுள்ளார்.
  • அங்கு, சில வருடங்களுக்கு முன்பு தேவராஜிடம் இருந்து பன்னீர் என்பவர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
  • இதில், பணத்தை திரும்பி தராத பன்னீரின் காரை தேவராஜ் எடுத்து சென்றதாக தெரிகிறது.
  • இந்நிலையில், தொடர்ந்து காரை திருப்பி தருமாறு கேட்டுக்கொண்டிருந்த பன்னீர், நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக சொந்த ஊர் திரும்பிய தேவராஜிடன் தனது நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
  • அப்போது, ஏற்பட்ட தகராறில் பன்னீரின் நண்பர்கள் தமிழ், வினித் ஆகியோர் தேவராஜை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்