சொத்து பிரச்சினையில் வெடித்த தகராறு...அண்ணனை கொல்ல முயன்ற ஆசை தம்பி...

x

இராமநாதபுரம் - பழனிவலசை

சொத்து பிரச்சினையில் வெடித்த தகராறு...

அண்ணனை கொல்ல முயன்ற ஆசை தம்பி...

அண்ணனை தள்ளிவிட்டு கொலை முயற்சி...

நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

ஐஞ்சு வயசுல அண்ணன் தம்பி, பத்து வயசுல பங்காளினு சொல்லுவாங்க அது உண்மை தான் போல. சொத்து பிரச்சினையில தம்பி கூட பிறந்த அண்ணனையே அடிச்சி கொல்ல முயன்றிருக்காரு... நெஞ்சை பதற வைக்குது அந்த காட்சிகள்...

வீட்டின் மாடியில் கூரையை பிடுங்கி அகற்றியவரை ஆவேசமாக ஓடி வந்து மற்றொரு நபர் கீழே தள்ளியிருக்கிறார்…

கண்ணிமைக்கும் நொடிக்குள் சுற்று சுவரில் அடிப்பட்டு கீழே விழுந்தவர் மயக்கநிலைக்கு சென்றிருக்கிறார் …

சற்று நேரத்தில் தலையிலிருந்து ரத்தம் ஆறாய் வழிய… மயக்கமடைந்தவரின் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்…

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த காட்சியை பார்க்கும்போது பரம விரோதிகுள் ஏற்பட்ட சண்டைபோல் தோன்றலாம்… ஆனால், உண்மை என்னவென்றால் மாடியிலிருந்து தள்ளிவிட்டவரும் கீழே விழுந்தவரும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்…

சொந்த அண்ணனையே கீழே தள்ளிவிட்டு கொல்ல முயன்றிருகிறார் தம்பி… ரத்தசொந்தம் ரத்தகாவு வாங்கிய குற்றபின்னணியை தெரிந்துகொள்ள விசாரணையில் இறங்கினோம்…

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ளது பழனிவலசை கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சிங்கம்… துரைசிங்கத்தின் அண்ணன் தான் தற்போது தலையில் அடிப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் ரத்தினசாமி.

இருவருக்கும் திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

சொந்த அண்ணன் மீதே தம்பி இவ்வளவு ஆக்குரோஷத்துடன் இருக்க காரணம் சொத்து பிரச்சனை…

துரைசிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமாக அதே ஊரில் பூர்வீக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் தனக்காக பங்கிற்கு யாரிடமும் கேட்காமல் பட்டா பதிவுச் செய்திருக்கிறார் துரைச்சிங்கம். இது அண்ணன் ரத்தினசாமிக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ரத்தினசாமி. இந்த சூழலில்தான் எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதுபோல் மீண்டும் அண்ணன் தம்பி இடையே பிரச்சனை வெடித்திருக்கிறது. துரைச்சிங்கம் தன் வீட்டின் பின்புறத்தில் தகரத்தில் ஷீட் போட்டு கூரை அமைத்திருக்கிறார்.

மழைக்காலத்தில் அந்த கூரையிலிருந்து வடிந்த மழை நீர் அண்ணன் ரத்தினசாமி வீட்டின் மேல் தளத்தில் விழுந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் சம்பவத்தன்று வீட்டின் மேல் ஏறி கூரையை பெயர்த்து சேதப்படுத்திருக்கிறார்.

தான் அமைத்த கூரையை அண்ணன் டேமேஜ் செய்தது துரைசிங்கத்திற்கு கோபத்தை கிளப்பியிருக்கிறது.

மாடி எறிவந்து ஆவேசத்தில் ரத்தினசாமியை கீழே தள்ளியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக் துரைசிங்கம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவுச் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

ரத்தினசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்