ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்..!- உற்சாகத்தில் ரசிகர்கள்

x
  • ஒன்பது நாடுகள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
  • இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் தலைமை செயல் அலுவலர் ஹித்தேன் ஜோஷி, நாளை முதல் 9ஆம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
  • ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • மேலும் இந்தியாவை சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • இரட்டையர் பிரிவுக்கான இறுதி போட்டி ஏப்ரல் 8ம் தேதியும் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி 9ம் தேதியும் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்