அதானி விவகாரம்... ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்... தொடர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

x

அதானி குழும விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர். அதானி குழும விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். மேலும் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதன் சில பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்