ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. நளினி உள்பட 6 பேரும் இன்று விடுதலை

x

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 18ஆம் தேதி ஆயூள் தண்டனை கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. தற்போது அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தீர்ப்பு இமெயில் மூலமாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலைகளுக்கு வந்த உடன் உடனடியாக அவர் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 6 பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்