சத்தியமங்கலத்தில் புலிகளை வேட்டையாடும் ராஜஸ்தான் கும்பல்- வெளியான ஷாக் தகவல்

x

5 புலிகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சாத்திய கூறுகளை ஆராயுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது சத்தியமங்கலத்தில் கடந்த ஒரு

வாரத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்டு உள்ளதாகவும், இதில் தொடர்புடைய ராஜஸ்தானை சேர்ந்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புலிகள் வேட்டையில் தொடர்புடைய ராஜஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க புலன்விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து கைதான 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும் என கூறி , விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்