சாலை முழுவதும் தேங்கி இருந்த மழைநீர்-நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

x

சாலை முழுவதும் தேங்கி இருந்த மழைநீர்-நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்- கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்

சென்னை வியாசார்பாடியில், சாலையில் நடந்து சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில், உமா ராணி என்பவர் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்ததால், சாலையின் உள்ளே புதைந்திருந்த மின்சார ஒயரில், மின்கசிவு ஏற்பட்டு, அந்தப் பெண்ணை மின்சாரம் தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்