“மழை மழை பஸ்க்குள்ளே அடிக்குது அடைமழை..“ - மழையில் குளித்தபடி பயணிகள் பயணம்

x

திருப்பூரில் பேருந்துக்குள் பெய்த மழையின் காரணமாக அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நனைந்தபடியே சென்றனர். திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான அவிநாசி பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமவை பெய்தது. இந்த நிலையில் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மேற்கூரை தரமற்றதாக இருந்ததன் காரணமாக மழை தண்ணீர் பேருந்துக்குள் விழுந்தது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நனைந்தபடியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்