தாம்பரத்தில் வெளுத்தெடுத்த மழை - அதிகாலை முதல் அதிரடி காட்டிய ஆணையாளர் அழகுமீனா

x

சென்னை தாம்பரம் பகுதியில் கனமழை பெய்த போதிலும், மாநகராட்சி ஆணையாளர் மேற்கொண்ட தீவிர களப்பணி காரணமாக மழைநீர் தேங்காமல் தடுக்கப்பட்டது. தாம்பரம் பகுதியில் இன்று காலை வரை 68 மில்லிமீட்டர் மழை பெய்தது. கனமழையின்போதே பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து, அதிகாலைமுதல் நடவடிக்கை மேற்கொண்டு ஊழியர்களுக்கு ஆணையாளர் அழகுமீனா அறிவுறுத்தியதுடன், களப்பணியிலும் ஈடுபட்டார். மழை நீர் தேங்காமல் மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டது. ஈஸ்வரி நகர் சுரங்கப்பாதை பகுதியிலும், இரும்புலியூர் டிடிகே நகர் பகுதியிலும் மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்