தண்டவாளத்தில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

x

நெய்வேலி அருகே பயணிகள் ரயில் மோதி, 2 பேர் உயிரிழந்தனர். மந்தாரக்குப்பத்தை அடுத்த தெற்குசேப்ளாநத்தத்தைச் சேர்ந்த தங்கசாமி, ஆதிமூலம், அஞ்சாப்புலி, இவர்கள் மூன்று பேரும், இறந்தவர்களை எரிக்கும் வேலையை செய்து வந்தனர். நேற்று உள்ளூரில் மரணமடைந்த ஒருவரை சுடுகாட்டில் எரித்துக் கொண்டிருந்த அவர்கள், அருகில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் மோதியதில், தங்கசாமி, ஆதிமூலம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அஞ்சாப்புலி என்பவர் படுகாயம் அடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்