இப்படி கூடவா திருடுவாங்க..? 2 கி.மீ தண்டவாளம் அபேஸ்!திகைத்து போன போலீஸ்...

x

பீகாரில் 2 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது.

சமாஸ்திபூர், பாண்டோல் சர்க்கரை ஆலைக்கு சென்ற பயன்பாடற்ற தண்டவாளத்தை நோட்டமிட்ட திருட்டு கும்பல், அதனை பிரித்து எடுத்துச் சென்றுள்ளது.

இதுகுறித்து விசாரிக்கும் தர்பங்கா ரயில்வே பாதுகாப்புப் படை துப்புக் கிடைக்காமல் தவிக்கும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் ஏற்கனவே ரயில் எஞ்சின், இரும்பு பாலம் திருடப்பட்டிருந்த நிலையில் இப்போது தண்டவாளம் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்