2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் அப்பீல்... குஜராத் ஹைகோர்ட்டில் இன்று விசாரணை

x

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி, ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி, சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு, கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி, விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் இன்று விசாரிக்கவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்