19 ஆண்டுகளாக வசித்த அரசு இல்லம்.. காலி செய்யும்போது வாடிப்போன ராகுல் - வெளியேறும் முன் சொன்ன ஒரே வார்த்தை..!

x

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார். இதையடுத்து, டெல்லியில் வசித்து வந்த அரசு இல்லத்தை ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், டெல்லியில் 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு இல்லத்தைக் காலி செய்த ராகுல் காந்தி, சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது, தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, ராகுல் காந்தி தனது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வார் என்று பிரியங்கா காந்தி கூறினார். அந்த இல்லத்தில் பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, புறப்படும் முன்பு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தன்னிடம் இருந்து இல்லத்தை பறித்தது எந்த பிரச்னையும் இல்லை என்றும், உண்மையைப் பேசுவதற்காக எத்தகைய விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்