"ராகுல் காந்தி பதவி பறிப்பு "..."சூரத் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்புடையதல்ல"- சீமான் ஆவேசம்

x

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்திருப்பது ஜனநாயக விரோதம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையாக எதிர்ப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்