பைக் மெக்கானிக்காக ராகுல் காந்தி.. ட்விட்டரில் வெளியான வைரல் புகைப்படம்

x

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் கரோல் பாக்கில் உள்ள ஒரு இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைக்குச் சென்று, மெக்கானிக்காக மாறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை உற்சாகப்படுத்திய ராகுல் காந்தி, அவர்களின் கரங்கள், பாரத தேசத்தை இயங்க வைக்கின்றன என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த கரங்கள்தான் இந்தியாவை உருவாக்குகின்றன என்றும், பாரத ஒற்றுமை பயணம் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்