கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் டிராவிட் - இடைக்கால பயிற்சியாளர் அறிவித்த பிசிசிஐ

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராகுல் டிராவிட் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது உறுதி செய்யப்பட்ட பின்பு, அவர் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் ஜிம்பாப்வே தொடர் முடிவடைந்த நிலையில், ஹராரேவில் இருந்து புறப்பட்ட வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்