மகனை அடித்ததால் ஆத்திரம்..! மனைவியை பாஜக-வினரோடு சென்று மிரட்டிய கணவன் - வெளியான பரபரப்பு வீடியோ

x

கோவையில், குடும்ப பிரச்சனையில், கணவர் தனது நண்பர்களை அழைத்துச் சென்று மனைவியை மிரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக் அரோரா - பிரியா ஆரோரா தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற 15 வயது மகனை, பிரியா அரோரா அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தீபக் அரோரா, பாஜகவில் இருக்கும் சில நண்பர்களை அழைத்துவந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தாயார் அடித்து துன்புறுத்தியதாக 15 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்