போராட்டத்திலிருந்து விலகிவிட்டேனா? - சாக்‌ஷி மாலிக் விளக்கம்

x

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் விளக்கம் அளித்து உள்ளார். பணிக்கு திரும்பியதால் சாக்‌ஷி மாலிக் போராட்டத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சாக்‌ஷி மாலிக், நீதி கோரும் போராட்டத்தில் இருந்து தாங்கள் யாரும் பின்வாங்கவில்லை என்றும், நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்து உள்ளார். ரயில்வேயில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்