"கல்குவாரி கிரசர்கள், லாரிகள் இன்று முதல் இயங்காது"... ஆலோசனைக் கூட்டத்தில் திடீர் முடிவு

x

தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரி கிரசர்கள், லாரிகள் இன்று முதல் இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அரசு அதிகாரிகளும் மிரட்டுவதாகவும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். இதை கண்டித்து, கல்குவாரி கிரசர்கள், லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எம் சாண்ட்- ஜல்லி உள்ளிட்ட கட்டிடப் பணிகளுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்