கல்லறையில் 'க்யூஆர் கோடு'.. இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய பெற்றோர்..

x
  • https://youtu.be/c7IUqQrTUzkகேரளாவில் இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டும் விதமாக மகனின் கல்லறையில் அவரை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக க்யூஆர் கோடு வைத்துள்ளனர், அவரது பெற்றோர்.
  • கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் ஐவின், கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்த போது துர்திஷ்டவசமாக உயிரிழந்தார்.
  • படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, இசை என அனைத்திலும் சகலகலா வல்லவனாக வலம் வந்த தங்கள் மகனின் பிரிவால் வாடி வந்த பெற்றோர், மறைந்த போதும் அவரது திறமைகளை உலகறிய செய்ய விரும்பினர்.
  • அதன் படி, தனது தம்பி குறித்த தகவல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அவரின் கல்லறையில் க்யூஆர் கோடு பதிக்க அவரது அக்கா யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி, தங்கள் மகனின் கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து, அவரின் நினைவூகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்கள், இந்த கேரள பெற்றோர்.

Next Story

மேலும் செய்திகள்