மூச்சடைக்கும் குழாயில் சிக்கிய குட்டிகள்.. தாய் நாய் நடத்திய பாசப் போராட்டம்.. நெகிழ்ச்சி சம்பவம்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழாயில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கரடிகுளம் கிராமத்தில் நீர் வடிகாலுக்காக சாலையின் குறுக்கே சிமென்ட் குழாய் போடப்பட்டிருந்தது.

இதில் 30 அடி ஆளத்தில் நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது...

அதன் பிறகு மழையால் குழாயின் உள்ளே நீர் சென்ற நிலையில், நாயால் குட்டிகளை மீட்டு வெளியே கொண்டுவர முடியவில்லை.

குட்டி நாய்களின் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றைக் கட்டிக் கொண்டு குழாய்க்குள் சென்று குட்டி நாய்களைக் காப்பாற்றி வெளியில் கொண்டு வந்து தாய் நாயுடன் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்