ஜவுளிக்கடைக்காரரை சுட்டுக்கொன்ற கொடூரன் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்

x

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜவுளிக் கடை உரிமையாளரை அடையாளம் தெரியாத இருவர் சுட்டுக் கொலை செய்தனர்.

தீன்பூர் கிராமத்தில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்ற இருவர், துணிகளை காண்பிக்குமாறு உரிமையாளர் குர்ஜந்த் சிங் என்பவரிடம் கேட்டதாக தெரிகிறது.

அப்போது, குர்ஜந்த் சிங்கை நோக்கி இருவரும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த குர்ஜந்த் சிங், மருத்துவமனைக்கு கொண்டுச்சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்த இருவரில் ஒருவர் கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் என்பதும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் எனவும் தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்