இறைச்சிக்காக நடந்த வேட்டை...இறந்த நிலையில் அரிய வகை பறவைகள் - சோதனையில் அதிகாரிகள் அதிர்ச்சி

x

புதுச்சேரியில் ஊசுடு ஏரியில் இருந்து இறைச்சிக்காக வேட்டையாடபட்ட அரிய வகை வனப்பறவைகளை நரிக்குறவர்களிடமிருந்து வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். வில்லியனூர்- பத்துகண்ணு சாலையில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில், வார இறுதி நாட்களில் அரிய பறவைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குடியிருப்புக்குச் சென்று சோதனை நடத்திய அதிகாரிகள், 20-க்கும் மேற்பட்ட பறவைகள், 2 கூண்டுகள், ஒரு வலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகளுடன் நரிக்குறவர்கள் வாக்குவாதம் செய்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்