விலாசம் கேட்டு தொழிலதிபர் கழுத்தில் கத்தி.. மரண பயம் காட்டி 80 சவரன் கொள்ளை - சிக்கிய சிசிடிவி.. மாட்டிய கும்பல்

x
  • புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த தொழிலதிபர் கருணாநிதி, தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்த போது, காரில் வந்த 3 பேர் விலாசம் கேட்டுள்ளனர்.
  • அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை கருணாநிதியின் கழுத்தில் வைத்து, அவரது வீட்டில் இருந்த 80 பவுன் நகை மற்றும் 38 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
  • இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, கொள்ளையடித்த சம்பவம் பதிவாகியிருந்த‌து தெரிய வந்த‌து.
  • கொள்ளையில் ஈடுபட்டது லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் தலைமையிலான கும்பல் என கண்டுபிடித்தனர்.
  • இதையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து, தலைமறைவாக உள்ள கொள்ளையர்கள் கிருஷ்ணகுமார், விழுப்புரத்தை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் அவர்களது கூட்டாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்