ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சியில்,மாணவர்களுடன் சிறிதுநேரம் ஓடிய ஆளுநர் தமிழிசை

x

ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சியில்,மாணவர்களுடன் சிறிதுநேரம் ஓடிய ஆளுநர் தமிழிசை

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் ஓற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து சிறிதுநேரம் ஓடினர்.


Next Story

மேலும் செய்திகள்