புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 - ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்திர உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பல்வேறு கோப்புகளுக்கு, ஒப்புதல் அளித்துள்ளர்.
அதன்படி, புதுச்சேரியில் பொங்கல் இலவச தொகுப்பு பொருள்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக 500 ரூபாய், முதியோர் உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான கோப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.
Next Story