பீர் பாட்டிலால் காவலர் மண்டை உடைப்பு - புத்தாண்டில் இளைஞர்கள் வெறிச்செயல்

x

புதுச்சேரியில் புத்தாண்டு அன்று, பீர் பாட்டிலால் காவலர் மண்டையை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் குற்ற பிரிவு காவலராக பணியாற்றுபவர் சுந்தரராமன்.

புத்தாண்டு தினத்தில் சீருடையின்றி ரோந்து சென்ற அவர், சாலையில் அமர்ந்து மது அருந்திய கும்பலை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், போதையில் இருந்த இளைஞர்கள், பீர்பாட்டிலால் சுந்தரராமனை தலை மற்றும் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், காவலரை தாக்கியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்