புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. எச்சரித்த சுகாதாரத்துறை இயக்குனர் | Pudhucherry | Virus

x
  • புதுச்சேரியில் ஆறு குழந்தைகள் உள்பட 12 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  • இது குறித்து விளக்கம் அளித்த அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பருவநிலை மாற்றத்தால் அனைவருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
  • இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்