கதவை உள்பக்கமாக பூட்டிய காவலர்.. நீண்ட நேரம் திறக்காததால் பதறிப்போன மனைவி - அடுத்து காத்திருந்த அதிர்ச்சி
- புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நாகராஜ் என்பவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் . அங்கு நாகாராஜூக்கும் அவரது மனைவி விஜயகுமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இதனால் மனம் உடைந்த நாகராஜ் அறை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு இருந்துள்ளார். நீண்ட
- நேரம் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது நாகராஜ்
- மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கினார். ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட
- அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story