ராமநாதபுரத்தில் அதிரிபுதிரியாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்...நேரில் கண்டு ரசித்த பொதுமக்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம் கிடா குளம் கிராமத்தில், கருப்பணசாமி கோயில் வருஷாபிஷேக விழாவை ஒட்டி, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில், பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் ஆறு வண்டிகள், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் என, மொத்தம் 22 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சாலையின் இரு புறங்களிலும் திரண்ட பொதுமக்கள் ஏராளமானோர், போட்டியை கண்டு களித்தனர். இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்