"இலவச வேட்டி சேலை திட்டம் கைவிடப்படுகிறதா?"... முன்னாள் அமைச்சரின் கேள்விக்கு சுவாரஸ்ய பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

x
  • சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, நிதிநிலை அறிக்கையில் கைத்தறி துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இடம்பெறவில்லை என்றும், எதிர்காலத்தில் இலவச வேட்டி, சேலை திட்டம் கைவிடப்படுகிறதா என்று சந்தேகம் எழுகிறது என்றும் கூறினார்.
  • அதற்குப் பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எந்தெந்த துறைக்கு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்று கூறினார்.
  • இந்த விவரங்கள், மடிக்கணினியில் உள்ளன என்றும், தேவைப்பட்டால் உறுப்பினரின் அச்சத்தை போக்கும் வகையில் புத்தகமாக தருகிறேன் என்றும் அவர் பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்