2 ஆண்டுக்கு முன் உயிருடன் இருக்கும்போதே காதலிக்கு நரக வேதனை கொடுத்த சைக்கோ

x

டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் அஃப்தப் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷ்ரத்தா கொலை தொடர்பாக நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகின்றன.

அந்த வகையில் 2020ம் ஆண்டு ஷ்ரத்தாவை, அஃப்தப் அடித்து துன்புறுத்திய புகைப்படத்தை அந்த பெண்ணின் நண்பர்கள் பகிர்ந்துள்ளனர்.

அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சமரசத்தின் பேரில் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

பின்னர் தாயுடன் வசித்து வந்த ஷ்ரத்தா, மீண்டும் ஏன் அஃப்தப்புடன் இணைந்தார் என்று தெரியவில்லை என கூறும் அவரது நண்பர்கள், அஃப்தப்பின் துன்புறுத்தல் தொடர்பாக ஷ்ரத்தா பேசிய வாட்சப் உரையாடல்களை பகிர்ந்துள்ளனர்.

அஃப்தப் துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஷ்ரத்தா, மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து கொண்ட தகவலையும் அவரது நண்பர்கள் பகிர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்