எரிபொருளுக்கான வரியை திரும்பப் பெற வலியுறுத்தல்... இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் - இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு

x

கேரளாவில் எரிபொருளுக்கான வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர், திடீரென்று இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தீ வைத்த நபர்களை கைது செய்ய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, அனைவரையும் போலீசார் கைது செய்ய முயன்றதால், அவர்களிடம் இருந்து போராட்டக்காரர்கள் தப்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்