ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு..தீக்குளிக்க முயன்ற பெண்கள்..ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

x

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ளாட்சிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீட்டை அதிகாரிகள் இடிக்கச் சென்றபோது, 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரப்பேரி கிராமத்தில் ரவி என்பவரின் வீட்டை நீதிமன்ற உத்தரவுப்படி இடிப்பதற்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது, ரவிக்கு ஆதரவாக உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 2 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் காப்பாற்றி, வேனில் அழைத்துச் சென்றனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஜேசிபி எந்திரம் மூலம் அந்த வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்