பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து.. 100 நாட்களை கடந்தும் தொடர் போராட்டம்

x

பரந்தூர் விமானநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 131 -ஆவது நாளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஏகனாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 131 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்