சொத்து தகராறு? வீடு புகுந்து இரும்பு ராடால் இளைஞர் கொலைவெறி தாக்குதல் - ஒருவர் பலி

x

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வீடு புகுந்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்தவர் திராவிடபாலு.

திமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரான இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவரது மனைவி செல்வி தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகனான முருகனுக்கு ரம்யா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளது.

இந்த நிலையில், இறந்த திராவிடபாலுவின் சகோதரர் மகனான புவனேஷ்குமார், திடீரென முருகனின் வீட்டிற்குள் புகுந்து அனைவரையும் இரும்பு ராடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 4 பேரும் படுகாயமடைந்த நிலையில், முருகனின் மனைவி ரம்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

இதையடுத்து, முருகன், அவரின் தாய் மற்றும் மகன் கருணாநிதி ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள புவனேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்