சொத்து வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா நேரில் ஆஜர்...

x

சொத்து வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி ஆ.ராசாவிடம் குற்றப்பத்திரிகை நகல் ஒப்படைக்கப்பட்டது.

வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் சொத்து சேர்த்ததாக 2015ல் திமுக எம்.பி ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்