பழமை வாய்ந்த பாரம்பரிய மில்லில் தரமற்ற எண்ணெய் தயாரிப்பு - இன்பர்மேஷன் வந்தவுடன் உணவுத்துறை அதிரடி

x

மேல புலிவால் ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆயில் மில்லானது தரமற்ற முறையில் எண்ணெய் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற முறையிலும், தரமற்ற முறையில் கலப்பட எண்ணெய்களை தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் எண்ணெய் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து வந்துள்ளனர். இதை அடுத்து அவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளக்கமும் தராததால் கடையில் இருந்த 4 ஆயிரத்து 500 லிட்டர் எடையுடன் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆயில் மில்லிற்கு சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்