"அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும்" -தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

x

காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றத்திற்கான, சென்னை ஓட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான்

நடைபெற்றது.

இதை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியுடன் சேர்ந்து சிறிது தூரம் மாரத்தான் ஓடினார்.

விழிப்புணர்வு நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, நடிகர் சித்தார்த், இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும்

பங்கேற்றனர்


Next Story

மேலும் செய்திகள்