புரோ கபடி லீக்.. இன்று அரையிறுதி போட்டிகள்.. வரலாறு படைக்குமா தமிழ் தலைவாஸ்?

x

புரோ கபடி லீக் சுற்றின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான்ஸ் அணிகள் மோதுகின்றன.

புரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக, தமிழ் தலைவாஸ் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்