நடுரோட்டில் கவிழ்ந்த தனியார் பேருந்து - 10 பேருக்கு நேர்ந்த கதி

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்10 பேர் காயம் அடைந்தனர். தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, மதுராந்தகம் அருகே வந்த போது, முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்று, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்