கணவன் உயிரை பறித்த தனியார் பஸ்.. கைக்குழந்தையுடன் கதறிய மனைவி - மனதை உலுக்கிய நிகழ்வு

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வள்ளுவம்பாக்கம் கிராமத்த சேர்ந்தவர் சுபாஷ். ஜூஸ் கடை நடத்தி வந்த சுபாஷ் கடைக்கான பொருட்கள் வாங்குவதற்காக வாலாஜாபேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

அப்போது, வேகமாக வந்த தனியார் பேருந்து மோதி சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகலறிந்து கைக்குழந்தையுடன் வந்த சுபாஷின் மனைவி உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்