செல்போன் கேட்ட கைதி.. தர மறுத்த காவலருக்கு, இரும்பு கம்பியால் சரமாரி தாக்குதல்

x

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர் காவலரை சரமாரியாக தாக்கிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நள்ளிரவில் வேலூர் மத்திய அரசிற்கு மாதேஷ் அழைத்துசெல்லப்பட்டதாக தெரிகிறது. அப்போது, சிறை காவலர் சுரேஷ் என்பவரிடம் செல்போன் கேட்கவே, அவர் தர மறுத்ததால் அருகில் இருந்த கம்பியால் காவலரை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று நலம் விசாரித்ததையடுத்து, கைதி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்