பிரதமரான ரிஷி சுனக் - 1947ல் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்த்ரா

x

ரிஷி சுனக் பிரட்டன் பிரதமரானது பற்றி, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மகிந்திரா செய்துள்ள டிவீட்டில், வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆருடம் பொய்த்துப் போனதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரட்டனின் மிக முக்கிய பிரதமராக கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சில், பிரதமராக இருந்த போது, இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதை எதிர்த்தார். இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் தரமும், திறமையும் அற்றவர்கள் என்றும், இந்தியாவை அழிவுக்கு கொண்டு செல்வார்கள் என்று 1947இல் கூறியிருந்தார். ஆனால் இன்று பிரட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியினர் பிரதமராகியுள்ளது, சர்ச்சிலின் கூற்றை பொய்பிக்கச் செய்துள்ளதாக, ஆனந்த் மகிந்திரா டிவிட்டர் மூலம் கூறியுள்ளார். இது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்