"மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்" - மல்லிகார்ஜுன கார்கே ஆவேச பேச்சு

x

மணிப்பூர் விவகாரத்தால் கோபமடைந்ததாகக் கூறும் பிரதமர் மோடி, முதலில் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கார்கே, ணிப்பூர் விவகாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி உள்ளார். பிரதமர் மோடி உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் தவறான ஒப்பீடுகளை மேற்கொண்டிருக்காமல், முதலில் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்