ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்

x

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார்.

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 அமைப்பின் உச்சி மாநாடு, 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா அழைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி, ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு சென்றுள்ளார். அங்கு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி 7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். அவர்களும் ஜப்பான் சென்றுள்ளனர். இதற்கிடையே, ஹிரோஷிமா நகரில், மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்